தமிழக செய்திகள்

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுக்கான தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகை திட்டம் அறிவிப்பு: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் மாதம் ரூ.25,000 ஊக்கத்தொகை பெறுவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது அரசு.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணிகள் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசுதரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாடு அரசானது ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணித் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் யு.பி.எஸ்.சி குடிமைப் பணித் தேர்வு ஊக்கத்தொகைத் திட்டத்தை செயல்படுத்துகிறது.

இத்திட்டத்தின் கீழ், 2026-ஆம் ஆண்டின் யு.பி.எஸ்.சி குடிமைப்பணி /இந்திய வனப்பணி முதன்மைத் தேர்வுகளுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு 25,000 ரூபாய் நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு நடப்பு ஆண்டில் யு.பி.எஸ்.சி குடிமைப்பணி / இந்திய வனப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், ஆன்லைன் மூலம் (https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc_registration/) 19.06.2026 முதல் 30.06.2026 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.