இன்று காலை சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்று தனது முதல் உரையை விஜய் ஆற்றினார்.
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சாலைகள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவத்து தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் நடந்து வருகிறது.
துறையின் செயல்பாடுகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் கருத்தை கேட்டறியும் விஜய் தனது வழிகாட்டுதல்களையும் அவர்களுக்கு வழங்கியுள்ளார்.
முன்னதாக மாநிலம் முழுவதும் பள்ளி, கோவில்கள் அருகே உள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் நேற்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.