எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்துள்ளது.
மன்னார் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டுள்ள 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஜேசுராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
முன்னதாக கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதியும் எல்லை தாண்டி மீன்பிடித்தாக ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இன்று (ஏப்ரல் 14) முதல் ராமேஸ்வரம் கடற்பகுதியில் விசை படகில் மீன் பிடிக்க மீன் பிடித் தடை காலம் துவங்கியுள்ளது.