சென்னை தலைமை செயலகத்தில் சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 18-ந் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. அப்போது கவர்னர் உரை நிகழ்த்த உள்ளார் என்றார்.
அப்போது, சட்டசபையில் அ.தி.மு.க.வினர் இரு பிரிவாக செயல்பட்டு உங்களிடம் புகார் மனு கொடுத்திருந்தார்களே? அதன் மீது முடிவெடுக்கப்பட்டுள்ளதா? என்று நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு அவை அனைத்தும் எனது ஆய்வில் உள்ளது. விரைவில் முடிவை அறிவிப்பேன் என்று கூறினார்.