ராயப்பேட்டை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், மக்கள் பிரச்சனைகளுக்கு காங்கிரஸ் குரல் கொடுத்ததா? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு செல்வப்பெருந்தகை, மக்களுக்காக நாங்கள் பேசவே கிடையாது என எப்படி நீங்கள் சொல்லலாம். நடவடிக்கை எடுக்கிறோம் என அரசு உறுதியாக கூறும்போது எப்படி போராட முடியும்? என கேள்வி எழுப்பினார்.
மேலும், நீங்கள் ஏன் அதை செய்யவில்லை, இதை செய்யவில்லை என எங்களை கேட்கக்கூடாது. மக்களுக்கு எதிரான பிரச்சனைகள், கொலை உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராக அறிக்கை கொடுக்கிறோம் என்றார்.