தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் பழங்கால சிலைகள் பறிமுதல்- 4 பேர் அதிரடி கைது

சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் குடியிருக்கும் சுமதி என்பவர் வீட்டில் இருந்து சிலைகள் பறிமுதல்.நாகாத்தம்மன் உலோக சிலை, உலோக உடைவாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னையில் 2 பழங்கால சிலைகள், உலோக வாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், பெண் சுமதி, பிரகாஷ், தங்கராஜ் மற்றும் ராஜேஷ் கண்ணன் என 4 பேர் கைது செய்து சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் குடியிருக்கும் சுமதி என்பவர் வீட்டில் இருந்து சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நாகாத்தம்மன் உலோக சிலை, உலோக உடைவாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சுமதியிடம் விசாரித்ததில், கோயிலில் இருந்து திருடப்பட்டதாகவும், சரியான நேரத்தில் விற்க காத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

சுமதியும், அவரது கணவர் பிரகாஷூம் சிலை குறித்து எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்காததால் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சிலைகள் எந்த கோயிலில் இருந்து எடுக்கப்பட்டன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.