தமிழக செய்திகள்

ஆட்சியாளர்களிடம் மக்கள் கேள்வி கேட்காமல் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை - சீமான்

மக்கள் அனைவரும் சும்மா இருக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

* மக்கள் அனைவரும் சும்மா இருக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர்.

* இலவச மிக்சி கொடுத்துவிட்டால் அதில் எதை அரைப்பது. கிரைண்டரில் எதை ஆட்டுவது. பிரிட்ஜ் கொடுத்தால் அதில் எதை வைப்பது.

* உங்கள் வீட்டில் திருடிவிட்டு ரூ.2000 கொடுத்தால் வாங்குவீர்களா?

* ஆட்சியாளர்களிடம் மக்கள் கேள்வி கேட்காமல் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை.

* என் இனத்திற்கு நிகழ்கால தேவை மட்டும் தான் தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.