தமிழ்நாடு செய்திகள்

கடலூரில் பரபரப்பு: பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு- போலீஸ் விசாரணை

பாமக பிரமுகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் கடலூரில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை.

மாலை மலர்

கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியில் வசித்து வருபவர் பாமகவை சேர்ந்த சிவசங்கர்.

இவர் மீது 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சிவசங்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிவசங்கர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாமக பிரமுகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் கடலூரில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.