தமிழ்நாடு செய்திகள்

தணியாத வெப்பம்- பள்ளி திறப்பை ஒத்திவையுங்கள்..! தமிமுன் அன்சாரி

தமிழகத்தில் வரும் 6ம் தேதி முதல் அரசுப் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.வெப்ப அலையிலிருந்து வளரும் பிள்ளைகளை பாதுகாப்பது என்பதும் ஒரு அரசின் கடமையாகும்.

மாலை மலர்

தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

தமிழகத்தில் வரும் 6ம் தேதி முதல் அரசுப் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், கடும் வெயில் எதிரொலியால் பள்ளிக் கூடங்கள் 2 வாரங்கள் தள்ளி திறக்க வேண்டும் என்று ம.ஜ.க தலைவர் தமிமுன் அன்சாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிமுன் அன்சாரி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மீண்டும் கடும் வெயில் தொடங்கியிருக்கிறது. வெப்ப அலையிலிருந்து வளரும் பிள்ளைகளை பாதுகாப்பது என்பதும் ஒரு அரசின் கடமையாகும்.

எனவே பள்ளிக்கூட திறப்பு தேதியை இரண்டு வாரங்கள் ஒத்திப் போடுவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.