தமிழ்நாடு செய்திகள்

அண்ணாநகரில் 11 மசாஜ் மையங்களுக்கு போலீசார் சீல்

உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக மசாஜ் சென்டர்கள் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக மசாஜ் சென்டர்கள் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மாலை மலர்

சென்னை:

சென்னை அண்ணாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக ஸ்பாக்கள் இயங்கி வருவதுடன் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில்கள் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் தனிப்படை போலீசார் மசாஜ் சென்டர்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக மசாஜ் சென்டர்கள் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் 11 மசாஜ் சென்டர்களுக்கு சீல் வைத்தனர்.