ஆயுதப்படை பிரிவில் 12வது பட்டாலியன் கமாண்டன்டாக பணியாற்றிய அருண் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அருண் வெளிநாட்டிற்கு செல்வதால் ராஜினாமா செய்வதாக ஆயுதப்படை ஏடிஜிபி செயராமுக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ராஜினாமா கடிதம் டிஜிபி சங்கர் ஜிவால் மூலம் உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஏற்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு குரூப் 1 தேர்வு மூலம் டிஎஸ்பியாக பணிக்கு சேர்ந்த அருண் 2024ல் எஸ்.பி., ஆனார்.