இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரதமர் மோடி அங்கிருந்து இன்று புறப்பட்டு தமிழ்நாடு வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ரெயில் பாலம் திறந்து வைத்து ரெயில் போக்குவரத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்திக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 40 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், முன்னான் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இருவரும் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கோரிய நிலையில் அனுமதி அளிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
எடப்பாடி பழனிசாமி தரப்பு பிரதமரை சந்திக்க நேரம் கேட்கவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேச உள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிரதரை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.