தமிழக செய்திகள்

"தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு மைதானங்கள் உலகத்தரத்திற்கு மேம்படுத்தப்படும்" - அமைச்சர் ஆதவ்

விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளும் தமிழ்நாட்டில் தான் அதிகம்.

தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு மைதானங்கள் உலகத்தரத்திற்கு மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களுக்கு மேலும் பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

இந்தியாவிலேயே அதிக விபத்துகள் தமிழ்நாட்டில் நடக்கிறது. ஆண்டுக்கு 18,000 பேர் பலியாகின்றனர்.

விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளும் தமிழ்நாட்டில் தான் அதிகம்.

கேரள எல்லைக்குள் சென்றதும் சீட் பெல்ட் போடுறாங்க.. Speed Limit மதிக்கிறாங்க.. ஆனால் தமிழ்நாட்டில் வாகன ஓட்டிகள் யாரும் விதிகளை மதிப்பதே இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.