தமிழக செய்திகள்

சேத்துப்பட்டில் பயணிகள் விரைவு ரெயில் தடம்புரண்டு விபத்து

பயணிகள் விரைவு ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் எந்த பாதிப்பும் இல்லை.தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை சேத்துப்பட்டில் பயணிகள் விரைவு ரெயிலின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

பயணிகள் விரைவு ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் எந்த பாதிப்பும் இல்லை.

பெட்டிகளை இணைப்பதற்காக சென்றபோது விபத்து ஏற்பட்டதால் பெரிய பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வழித்தடத்தில் வேறு எந்த ரெயில்களும் வராது என்பதால் போக்குவரத்து சேவையில் பாதிப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது.

தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.