தமிழக செய்திகள்

சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.மோகனின் உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டது.

மாலை மலர்

தமிழகத்தில் நீண்டநாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் 60க்கும் மேற்பட்டோரா கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் சென்னையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மறைமலை நகரை சேர்ந்த 60 வயதான மோகன் என்பவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

மேகன் என்வர் ஏற்கனவே பல்வேறு இணை நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

மோகனின் உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டது.

மேலும், இறந்த நபரின் மூலம் கொரோனா பரவாமல் தடுக்கவும், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.