சென்னை அரும்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தின் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழந்துள்ளார். மேலும், கணவன் மற்றும் 2 மகன்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.
ஐடி ஊழியராக சிவச்சந்திரன், மனைவி திவ்யா (33), மகன்கள் தர்ஷித் (8), தர்ஷன் (2) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது ஆம்னி பேருந்து மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில், திவ்யா பலியான நிலையில் படுகாயமடைந்த சிவச்சந்திரன், தர்ஷித், தர்ஷன் ஆகியோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தை தொடர்ந்து, சென்னை அண்ணா நகர் போக்குவரத்து போலீசார் ஆம்னி பேருந்து ஓட்டுநர் நாகராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.