சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும்.
சமூக நீதி, சமத்துவத்தை நிலைநாட்ட சமமான வளர்ச்சியை உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய சாதி வாரி கணக்கெடுப்பு அவசியம் என தெரிவித்துள்ளார்.