வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுவதை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
* அனைத்து தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக வெல்லும்.
* சட்டசபை தேர்தலில் நான் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறேன்.
* அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவது குறித்து பா.ஜ.க.வின் தேசிய தலைமை முடிவு செய்யும்.
* பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை மத்திய அரசு செய்துள்ளது. தமிழக அரசும் வரியை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த பட்டியல் வெளியாவதற்கு முன்பே நயினார் நாகேந்திரன் தான் போட்டியிடும் தொகுதி குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.