தமிழக செய்திகள்

ஈரோட்டில் நாதக- தபெதிகவினர் இடையே மோதல்

நாம் தமிழர் கட்சியினர் துண்டறிக்கை விநியோகித்தவர்களை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

மாலை மலர்

ஈரோடு:

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினருக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் சீமானுக்கு எதிராக துண்டறிக்கை விநியோகித்தனர். அப்போது அதே பகுதியில் பிரசாரம் செய்து கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியினர் துண்டறிக்கை விநியோகித்தவர்களை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.