சென்னையில் நூற்றுக்கணக்கான பஸ் நிறுத்தங்களை இடமாற்றம் செய்ய போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் சிக்னல் மற்றும் மேம்பாலங்களுக்கு அருகே உள்ள பஸ் நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்க உள்ளது.
அனைத்து வழித்தடங்களிலும் ஆய்வு செய்து, பஸ் நிறுத்தங்களை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக பாரிமுனை - முகப்பேர், வடபழனி, தரமணி வழித்தடங்களில் ஆய்வு செய்து மாநகராட்சியிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.