தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
வெற்றி ஒன்றே இலக்கு! ஓய்வின்றி உழைக்கும் கழகத்தின் செயல்வீரர்களுக்குப் பாராட்டுகள்!
நேற்றிரவு கோவையில் முதற்கட்டப் பரப்புரைப் பயணத்தை நிறைவுசெய்துவிட்டு, சென்னைக்குத் திரும்பினேன்.
இன்று காலை, தமிழ்நாடு முழுவதும் களப்பணியாற்றி மக்களின் நம்பிக்கையை வாக்குகளாக உறுதிசெய்து வரும், கழகச் செயல்வீரர்களுடன் உரையாடி, ஊக்கப்படுத்தினேன்.
மாலை, பாளைங்கோட்டையில் இரண்டாம்கட்டப் பரப்புரைப் பயணத்தைத் தொடரப் புறப்படுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.