விருதுநகர் சத்திரரெட்டியபட்டியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
* சங்கி கூட்டங்களை போல வாட்ஸ் அப் வதந்திகளை வாந்தி எடுக்கிறார் இபிஎஸ்.
* அடுத்தடுத்த பொய்களை கூச்சமே இல்லாமல் பேசுகிறார்.
* மறைந்த காமராஜருக்கு கலைஞர் மெரினாவில் இடம் கொடுக்க மறுத்ததாக இபிஎஸ் பொய் பிரசாரம் செய்கிறார்.
* காமராஜர் உடல் அடக்கம் செய்யும் இடத்தை தேர்வு செய்தவரே கலைஞர் கருணாநிதி தான்.
* காமராஜரின் உடலை முப்படைகளிடம் இருந்து பெற்று பீரங்கி வண்டி மீது ஏற்றியவர் கலைஞர் கருணாநிதி.
* பெருந்தலைவர் காமராஜருக்கு மகனைப் போன்று இறுதிச் சடங்குகளை செய்தார் கலைஞர் கருணாநிதி.
இவ்வாறு அவர் கூறினார்.