இன்று தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
இந்த கொண்டாட்டத்தில் அவரது மனைவி துர்கா, துணை முதலமைச்சர் உதயநிதி மற்றும் அவரது மனைவி கிருத்திகா மற்றும் பேரன் இன்பநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பொங்கல் கொண்டாட்டத்தின் போது குடும்பத்தினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.