ஆதி திராவிடர், பழங்குடியினர் விடுதியை நிர்வகிக்க, மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய அரண்- விடுதி பராமரிப்பு மேலாண்மை அமைக்கப்படும்.
தமிழ்நாடு சட்டசபையில் சமூக நீதித்துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளுக்கான வருடாந்திர பராமரிப்பு தொகை உயர்த்தி வழங்கப்படும்.
* ஆதிதிராவிட மக்கள் சமுதாய நிகழ்வுகளை நடத்த 100 சமுதாய கூடங்கள் கட்டப்படும்.
* தூய்மை பணியாளர்களுக்கு சொந்த வீடு வழங்க அகம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு. இத்திட்டத்தில் 2500 கான்கிரிட் வீடுகள் வழங்கப்படும்.
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ரூ.160 கோடியில் 150 சமூக நீதி விடுதிகள் கட்டப்படும்.
* தரமான, சத்தான உணவு வழங்கும் பொருட்டு விடுதி மாணவர்களுக்கு வழங்கும் மாதாந்திர உணவு கட்டணம் உயர்த்தப்படும்.
* ஆதிராவிட குடும்ப தலைவிகளுக்காக விடிவெள்ளி மகளிர் வாழ்வாதார திட்டம் செயல்படுத்தப்படும்.
* வீடற்ற ஆதிதிராவிடர் குடும்பங்களுக்காக இனிய இல்லம் திட்டம் செயல்படுத்தப்படும்.
* ஆதி திராவிடர், பழங்குடியினர் விடுதியை நிர்வகிக்க, மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய அரண்- விடுதி பராமரிப்பு மேலாண்மை அமைக்கப்படும்.
* மாணவர்களுக்கு பாதுகாப்பு, சுகாதாரமான மற்றும் கல்விக்கு உகந்த தங்குமிடம் சூழலை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க கோவையில் வணிக மையம் கட்டப்படும்.
* உதகையில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையத்தின் பணிகளை விரிவுபடுத்தும் வகையில் சென்னையில் பண்பாட்டு மையம் அமைக்கப்படுகிறது. சென்னை நந்தனத்தில் பழங்குடியினர் பண்பாட்டு மையம் அமைக்கப்படும்.
* பழங்குடியினர் மருத்துவம், பொறியியல் உயர்கல்வியை அதிகரிக்க சிறப்பு கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் அறிவு திறனை மேம்படுத்திக்கொள்ள அம்பேத்கர் படிப்பகம் ஏற்படுத்தப்படும்.