பாரதிதாசன் மீது அக்கறை இருப்பதுபோல் திமுக நாடகமாடுகிறது என்று அமைச்சர் வன்னி அரசு கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மாணவர் பாரதிதாசன் தற்போது வரை பில் அனுப்பாத நிலையிலும் முழு உதவித்தொகையையும் தவெக அரசு அனுப்பி விட்டது.
* திமுக ஆட்சியில் பின்பற்றப்பட்ட வழிமுறைதான் தற்போதும் பின்பற்றப்படுகிறது.
* திமுக அரசு கேட்டதைப்போல் தான் தற்போது தவெக அரசும் உதவித்தொகைக்கான பில் உள்ளிட்டவற்றை கேட்கிறது.
* திமுக ஆட்சியில் தலித் இளைஞர்கள் மிக மோசமாக நடத்தப்பட்டனர்.
* திமுக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வித்தொகைக்கு விண்ணப்பித்த 609 பேரில் 601 பேர் தகுதி பெற்றும் 181 பேருக்கு மட்டும் திமுக உதவித்தொகை கொடுத்தது ஏன்?
* பாரதிதாசன் மீது அக்கறை இருப்பதுபோல் திமுக நாடகமாடுகிறது.
* மாணவர் பாரதிதாசனுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்.
* மாணவன் பாரதிதாசன் கல்வி உதவித்தொகை விவகாரத்தில் திமுக தான் அரசியல் செய்கிறது.
* திமுக ஆட்சி காலத்தில் நடந்த கவின் படுகொலை உள்ளிட்ட விவகாரங்களை சுட்டிக்காட்டி அரசியல் செய்வது திமுக தான்.
* கவின் ஆணவப்படுகொலை விவகாரத்தில் விசிக போராடிய பிறகே சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டார்.
* கவின் படுகொலை விவகாரத்தில் விசிக தான் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தது.
* வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீதே எப்ஐஆர் போட்டது திமுக அரசு. பாதிக்கப்பட்டோர் மீது எப்படி வழக்கு பதிவீர்கள் என ஸ்டாலினை சந்தித்து கேள்வி எழுப்பினோம்.
* வேங்கைவயல் விவகாரத்தில் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.