சென்னை:
தமிழகத்திலேயே சிறந்த காவல் நிலையமாக முதலிடம் பிடித்த மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கான கோப்பையை இன்ஸ்பெக்டர் காசியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கான கோப்பையை இன்ஸ்பெக்டர் உதயகுமாரிடமும், 3-வது இடத்தை பிடித்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த திருத்தணி காவல் நிலையத்திற்கான கோப்பையை இன்ஸ் பெக்டர் மதியரசனிடமும் வழங்கினார்.