தமிழக செய்திகள்

கரூர் கூட்டநெரிசல்: விஜயை கைது செய்ய வேண்டும் - நடிகை ஓவியா

விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர் இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மாலை மலர்

கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்.

தமிழ்நாட்டையே உலுக்கி உள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கலும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விஜயை கைது செய்யவேண்டும் என்று நடிகை ஓவியா தெரிவித்துள்ளார். நடிகை ஓவியா "arest vijay" என்று இன்ஸ்டா ஸ்டோரி வைத்துள்ளார்.