தமிழக செய்திகள்

ஆளுநர் மாளிகையில் தற்காலிக சபாநாயகராக பதவியேற்றார் கருப்பையா

முதலமைச்சர் விஜய்க்கு பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்து முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த உடன் தற்காலிக சபாநாயகர் தேர்வு செய்வதற்கான கோப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து இட்டார்.

முதலமைச்சர் விஜய்க்கு பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார்.

தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையாவுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வானர்களுக்கு நாளை காலை 9.30 மணிக்கு பதவியேற்பு நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது.