இப்போது, உரையாடல் நீடித்த சீர்திருத்தத்திற்கு வழிவகுப்பதை நாம் உறுதி செய்வோம். முன்னால் உள்ள பாதை நீண்டது, ஆனால் இந்தியர்கள் அதை ஒன்றாகவே கடக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
மோதலுக்கு பதிலாக உரையாடல் இடம்பெறுவதை கண்டு மகிழ்ச்சி. கருத்து வேறுபாட்டிற்கு உரையாடல் அவசியம். இதுவே ஜனநாயகத்தின் செயல் வடிவம். பெல்லட் குண்டு துப்பாக்கிகள், மின் அதிர்ச்சி தடியடிகள் மற்றும் ஆணிகள் பதிக்கப்பட்ட தடிகளுக்கு காந்தியின் மண்ணில் இடமில்லை.
அதேபோல், பாதுகாப்பு படையினர் மற்றும் பொது சொத்துக்கள் மீதான தாக்குதல்களும் நேர்மையாக விசாரிக்கப்பட வேண்டும். பொறுப்புக்கூறல் பாரபட்சமாக இருக்கக்கூடாது. இந்த தருணமும் வாய்ப்பும் வினாத்தாள் கசிவுகளை விட பெரியது. தேர்வுகளின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவும், கல்வி சார்ந்த மன அழுத்தத்தை குறைக்கவும், கல்வியை நவீனமயமாக்கவும் 3 மாத கால செயல் திட்டத்துடன் கூடிய, கல்வி மற்றும் தேர்வு சீர்திருத்தத்திற்கான ஒரு தேசிய ஆணையத்தை நான் வலியுறுத்துகிறேன்.
மேலும், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்வினால் ஏற்படும் மனித இழப்புகளை இளம் அனிதாவின் மரணம் முதன்முதலில் வெளிப்படுத்திய தமிழ்நாட்டின் குரலையும் இந்த ஆணையம் கேட்க வேண்டும். அரசாங்கம் இதில் ஈடுபட முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
இப்போது, உரையாடல் நீடித்த சீர்திருத்தத்திற்கு வழிவகுப்பதை நாம் உறுதி செய்வோம். முன்னால் உள்ள பாதை நீண்டது, ஆனால் இந்தியர்கள் அதை ஒன்றாகவே கடக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.