தமிழ்நாடு செய்திகள்

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை

TDS பிடித்தம் செய்வதில் குளறுபடி இருப்பதாக வருமான வரித்துறைக்கு புகார்.பசுமை எரிசக்தி கழக பிரிவு அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டதாக தகவல்.

மாலை மலர்

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TDS பிடித்தம் செய்வதில் குளறுபடி இருப்பதாக வருமான வரித்துறைக்கு அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது

பசுமை எரிசக்தி கழக பிரிவு அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.