தமிழக செய்திகள்

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தின் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சேலம், ஈரோடு, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னை பொறுத்தவரையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.