தமிழ்நாடு செய்திகள்

என்எல்சி நிறுவனத்தில் பணிபுரிய தடையில்லா சான்று வழங்கியதில் மோசடி

ஊ.மங்கலம் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் சுதாகர் கைது செய்யப்பட்டுள்ளார்.7 வழக்குகளில் தொடர்புடைய நபருக்கு தடையில்லா சான்று வழங்கியது அம்பலம்.

மாலை மலர்

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணிபுரிய தடையில்லா சான்று வழங்கியது மோசடி நடந்துள்ளது.

இதையடுதது, ஊ.மங்கலம் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் சுதாகர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், 2 தலைமை காவலர்களான சங்கு பாலன், ஜோசப் சஸ்பெண்ட் செய்து கடலூர் மாவட்ட எஸ்.பி., ராஜாராமஜ் அதரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

7 வழக்குகளில் தொடர்புடைய நபருக்கு தடையில்லா சான்று வழங்கி அவர் பணியில் தொடர்ந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.