முன்னாள் எம்.பி.யும், அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாருமான இளவரசன் கட்சியில் இருந்து விலகுவதாக அிறவித்துள்ளார்.
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக இளவரசன் அறிவித்துள்ளார்.
இபிஎஸ் தலைமையில் அதிமுக தொடர் தோல்வியை சந்திக்கிறது. அதற்கு பொறுப்பேற்கவும் இல்லை என இளவரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், பிரிந்துள்ள அதிமுக அணிகளை ஒருங்கிணைக்கவும் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.