தமிழக செய்திகள்

ரூ.17 கோடி மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் கைது

ரூ.17 கோடி மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் மகன் ராஜா கைது செய்யப்பட்டார். ராஜா மீது தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

ரூ.17 கோடி மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் மகன் ராஜாவை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜா மீது தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடி வழக்கு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் தூத்துக்குடி மாநகராட்சியின் 59-வது வார்டு கவுன்சிலராகவும் எதிர்கட்சி தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.