தமிழக செய்திகள்

சி.வி.சண்முகம் தரப்பு மீது ஆளுநர் மாளிகையில் புகார் அளித்த இபிஎஸ் தரப்பு

அதிமுக கொறடாவின் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவை மீறியுள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பில் சி.வி.சண்முகம் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் மீது ஆளுநர் மாளிகையில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இபிஎஸ் தரப்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம் ஆகியோர் ஆளுநர் மாளிகையில் புகார் அளித்தனர்.

அந்த மனுவில், அதிமுக கொறடாவின் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவை மீறியுள்ளனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவி சண்முகம் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.