தமிழ்நாடு செய்திகள்

மின் கட்டண உயர்வால் அனைத்து மக்களுக்கும் பாதிப்பு- அன்புமணி ராமதாஸ்

கோவையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகுறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.மின் கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

மாலை மலர்

சென்னை:

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* கோவையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகுறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

* கடந்த 2 ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது.

* மின் கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

* மின் கட்டண உயர்வால் தமிழகத்தின் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* காவிரி நீரை சேமித்து வைக்க தமிழக அரசிற்கு தெரியவில்லை என்று கூறினார்.