த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்தால் நடவடிக்கை பாயும் என எச்சரித்திருந்த நிலையிலும், வேலுமணி தரப்பு அ.தி.மு.க. ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதுதொடர்பாக சட்டசபை வளாகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
* 6 அமைச்சர், வாரியத் தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டு த.வெ.க. அரசுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் ஆதரவு அளித்துள்ளனர்.
* தூய்மையான ஆட்சி நடத்துகிறேன் என சொல்லும் முதலமைச்சர் விஜய் எல்லா இடத்திலும் தூய்மையாக இருக்க வேண்டும்.
* தவறான பாதையில் முதலமைச்சர் விஜய் செல்வது வருத்தத்தை அளிக்கிறது.
* த.வெ.க. அரசுக்கு ஆதரவளித்து அ.தி.மு.க.வுக்கு சில எம்.எல்.ஏ.க்கள் துரோகம் செய்துள்ளனர்.
* கொறடா உத்தரவை மீறி த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் புகார் அளிக்க உள்ளோம்.
* அடையாளம் காட்டிய கட்சிக்கே துரோகம் செய்துள்ளனர்.
* தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்ததால் தான் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றத.
* பிரிந்து கிடக்கும் ஒரு அணியைச் சென்று முதலமைச்சர் விஜய் சந்தித்து இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.