நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 5 அதிமுக, 1 பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
* போலி மதுபான ஆலையை நடத்தும் திமுகவினர்.
* காவல்துறையை கண்டால் குற்றவாளிகளுக்கு பயமில்லை.
* குற்றவாளிகளுக்கு திமுகவினர் துணை நிற்கின்றனர்.
* வறுமை இல்லையென்றால் எதற்காக கிட்னியை விற்கின்றனர்.
* ஆளுக்கு தகுந்தாற்போல கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டனர்.
* கிட்னி முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
* திமுக ஆட்சி கொடுமையான ஆட்சி.
* ஆளுங்கட்சி எம்எல்ஏவே கிட்னி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.
* திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
* திமுக எம்எல்ஏவின் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
* அதிமுக ஆட்சியில் அதிக கல்விக்கூடங்கள் திறக்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.