ஈரோடு மாவட்டம் டி.ஜி.புதூர் பகுதியில் அந்தியூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஹரிபாஸ்கர், பவானிசாகர் தொகுதி அதிமுக வேட்பாளர் பண்ணாரியை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:
* அதிமுகவை விட்டு வெளியேறியவர்கள் அனைவரும் திமுக பி டீம்.
* விவசாயிகள் மீது அக்கறையில்லாத அரசு திமுக அரசு.
* அதிமுகவை உடைக்க திமுக சதி செய்தது.
* செங்கோட்டையனுக்கு அடையாளம் கொடுத்தது பொதுமக்கள் தான்.
* எம்எல்ஏக்கள் தான் என்னை முதலமைச்சராக்கினர்.
* உங்கள் முன் தொண்டனாக பேசுகிறேன். தலைவனாக இல்லை.
* எடப்பாடி தொகுதியில் 11-வது முறையாக நிற்கிறேன்.
* அதிமுக என்பது தொண்டர்களின் கட்சி.
* 4 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை கொடுத்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.