தமிழக செய்திகள்

பகுத்தறிவுப் பகலவனின் பிறந்தநாள்: வாழ்க பெரியாரின் புகழ் - எடப்பாடி பழனிசாமி

சமத்துவ சமுதாயம் காண வயது கூடினும் தளராமல் உழைத்தார்!யாருக்கும் யாரும் சிறியார் அல்ல என்றார்!

மாலை மலர்

சென்னை:

தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்படி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

கேள்விகள் கேட்டு பகுத்தறிவை விதைத்தார்!

உணர்வுகளைத் தட்டி உழுப்பி உரிமைக்காக போராடினார்!

சமத்துவ சமுதாயம் காண வயது கூடினும் தளராமல் உழைத்தார்!

யாருக்கும் யாரும் சிறியார் அல்ல என்றார்!

அதனாலே அவர் நம் பெரியார் என்றானார்!

பகுத்தறிவுப் பகலவனின் பிறந்தநாளில், அவர் வகுத்த சமூகநீதிப் பாதையில் என்றும் பயணித்து, உண்மையான சமத்துவ ஆட்சியை அ.தி.மு.க. தலைமையில் 2026-ல் அமைத்திட உறுதியேற்போம்!

வாழ்க பெரியாரின் புகழ்! என்று கூறியுள்ளார்.