பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அ.திமு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்திப்பானது நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி உடன் முன்னாள் அமைச்சர்களும் ஆளுநரை சந்தித்தனர்.
தமிழக அமைச்சரவை கூட்டம் மற்றும் தமிழக சட்டசபை வருகிற 20-ந்தேதி கூட உள்ள நிலையில் ஆளுநருடனான எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.