தமிழக செய்திகள்

சபாநாயகருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக வேலுமணி தேர்வு செய்யப்பட்டதாக ஒரு தரப்பு எம்.எல்.ஏ.க்கள் கடிதம் அளித்து இருந்தனர்.

தமிழக சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார்.

தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமியும் சந்தித்தார். அப்போது, அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிசாமி தொடர வேண்டும், அதற்கு சபாநாயகர் உத்தரவிட வேண்டும். மேலும் துணைத்தலைவராக ஓ.எஸ்.மணியன், கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி செயல்பட தடை விதிக்கக்கூடாது என கடிதம் அளித்துள்ளார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக வேலுமணி தேர்வு செய்யப்பட்டதாக ஒரு தரப்பு எம்.எல்.ஏ.க்கள் கடிதம் அளித்து இருந்தனர்.