முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி உள்ளது. அக்கடிதத்தில்,
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்த அனுமதி கோரி உள்ளது. பணமோசடி வழக்கு ஒன்றில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டி உள்ளது.
ஏற்கனவே செந்தில்பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.