தமிழக செய்திகள்

திமுக கடைபிடிப்பது போலி மதச்சார்பின்மை- நயினார் நாகேந்திரன்

பெண்களை மதிக்க தெரியாமல் திமுக அமைச்சர்கள் பேசுகின்றனர்.தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும்.

மாலை மலர்

புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் பிரச்சார பயண நிறைவு விழாவில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உரையாற்றினார்.

அப்போது அவர், கரூர் கூட்ட நெரிசல், கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு சம்பவங்களை சுட்டிக்காட்டி பேசினார்.

மேலும் அவர் கூறியதாவது:-

பெண்களை மதிக்க தெரியாமல் திமுக அமைச்சர்கள் பேசுகின்றனர்.

திமுக ஆட்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர்.

நாங்கள் உருவாக்கியது ஆட்சி மாற்றத்திற்கான கூட்டணி; திமுக உருவாக்கியது போலி கூட்டணி, திமுக கடைபிடிப்பது போலி மதச்சார்பின்மை

தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும். பீகார் மற்றும் திருவனந்தபுரத்தில் வீசிய காற்று தமிழ்நாட்டிலும் வீசும்.

இவ்வாறு அவர் கூறினார்.