தருமபுரி மாவட்டம், வெள்ளிசந்தை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) மின்சார நிறுத்தம் செய்யப்படுகிறது. இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளர் சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி, வெளிச்சந்தை பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளான பாலக்கோடு, சர்க்கரை ஆலை, எர்ரனஅள்ளி, கடமடை, கொல்லஅள்ளி, தண்டுகாரனஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, வெள்ளி சந்தை, பேளார அள்ளி, எண்டப்பட்டி, தொட்டார்தனஅள்ளி, கொலசனஅள்ளி, மாரண்ட அள்ளி, புலிக்கரை, அமானி மல்லாபுரம், பொரத்தூர், மோட்டூர், பஞ்சப்பள்ளி, பெல்லுரனஅள்ளி, பேவு அள்ளி, காட்டம்பட்டி, கரகத அள்ளி, சோமன அள்ளி, பந்தல அள்ளி, ஜக்கசமுத்திரம், சூடப்பட்டி, மகேந்திரமங்கலம், மதகிரி சிக்க மாரண்டஅள்ளி, காடுசெட்டிப்பட்டி தப்பை, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மின்மாற்றிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளபட இருப்பதால் நாளை 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அதில் தெரிவித்துள்ளார்.