தமிழக செய்திகள்

சட்டவிரோத மணல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை- உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

நாட்டின் சொத்தான கனிமவளம், கொள்ளை போவதை தடுப்பது அதிகாரிகளின் கடமை.திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத குவாரிகள் செயல்படாமல் தடுக்க வேண்டும்.

மாலை மலர்

சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பான விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் சட்டவிரோத குவாரிகளை மூட உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நாட்டின் சொத்தான கனிமவளம், கொள்ளை போவதை தடுப்பது அதிகாரிகளின் கடமை.

திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத குவாரிகள் செயல்படாமல் தடுக்க வேண்டும்.

சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பான விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியருக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.