ராமநாதபுரம் அரசு சமூக நல விடுதியில் பட்டியலின மாணவர் மீது பிற சமூக மாணவர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அம்மா பூங்கா பகுதியில் உள்ள அரசு சமூக நல விடுதியில் 8-ம் வகுப்பு மாணவர் மீது பிற சமூக மாணவர்கள் சரமாரி தாக்குதல் நடத்தி உள்ளனர். வீடியோவில், மாணவரை கீழே தள்ளி அடித்ததோடு சித்ரவதை செய்தது வெளியாகி இருந்தது.
இந்நிலையில் விடுதியில் மாணவரை சக மாணவர்கள் தாக்கும் வீடியோ வெளியான நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை குழு அமைத்த ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் சக மாணவர்களை விடுதியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
விடுதியில் மாணவரை சக மாணவர்கள் தாக்கிய நேரத்தில் அரசு சமூக நல விடுதி காப்பாளர், சமையலர் எங்கே என கேள்வி எழுந்துள்ளது.