தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் தொடங்கியது விஜயின் சர்கார்... என்ன இருக்கு, என்ன இல்லை... வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்- முதலமைச்சர் அதிரடி

எனக்கு வறுமை, பசி என்றால் என்னவென்று தெரியும், நான் மன்னர் பரம்பரையில் இருந்து வரவில்லை.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் 3 முக்கிய கோப்புகளில் விஜய் கையெழுத்து இட்டார். இதையடுத்து முதலமைச்சர் விஜய் பேசியதாவது:-

எனக்கு வறுமை, பசி என்றால் என்னவென்று தெரியும், நான் மன்னர் பரம்பரையில் இருந்து வரவில்லை.

நான் தேவதூதன் அல்ல, சமானிய மனிதன், பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்ற மாட்டேன்.

தமிழ்நாடு அரசின் நிதி நிலை குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

தமிழ்நாட்டின் கஜானா காலியாக உள்ளது. வழித்து தொடைத்து வைத்திருக்கிறார்கள்.

எனக்கு அவமானம், கஷ்டம் கொடுத்தவர்களாக இருந்தாலும் நண்பன். எதிரி என யாராக இருந்தாலும் 8 கோடி மக்களும் என் மக்கள் தான் என்றார்.