தமிழக செய்திகள்

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆலோசனை

புதிய திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக அரசு அதிகாரிகள் மற்றும் தலைமைச் செயலாளர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை:

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட த.வெ.க தலைவர் விஜய் தலைமைச் செயலகத்திற்கு சென்று பணிகளை மேற்கொண்டார். அப்போது தற்காலிக சபாநாயகரை நியமிப்பதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.

இதையடுத்து, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், தனிச்செயலாளராக லட்சுமி பிரியா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, புதிதாக நியமிக்கப்பட்ட தலைமைச் செயலாளர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

புதிய திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக அரசு அதிகாரிகள் மற்றும் தலைமைச் செயலாளர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.