சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் அமைந்துள்ள தொழிலாளர் நினைவு சின்னத்திற்கு சிவப்பு நிறச் சட்டை அணிந்து வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து மே தின விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* இந்தியாவிலேயே சென்னையில் தான் மே முதல் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
* உலகினை உழைப்பால் செலுத்தும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு உழைப்பாளர் நாள் வாழ்த்துகள்.
* எல்லாருக்கும் எல்லாம் என்ற கொள்கையில் ஆட்சி செய்கிறோம். அது தொடரும்.
* திமுக தொண்டர்களின் உழைப்பின் பலன் மே 4-ந்தேதி தெரியும். இன்னும் 2 நாட்களில் உங்களுக்கு நல்ல செய்தி வரும்.
* சட்டசபை தேர்தலில் நமக்கு வெற்றி என்பதில் துளி அளவும் மாற்றமில்லை
* திமுக தொண்டர்களின் உழைப்பின் மீதான நம்பிக்கையில் பேசுகிறேன்.
* திமுக ஆட்சி மீண்டும் தொடரும்... தொடரும்... தொடரும்...
இவ்வாறு அவர் கூறினார்.